வரவிருக்கும் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பாக கோவை தொகுதி விவகாரம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடந்தது .இந்த கூட்டத்திற்காக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமானம் மூலம் கோவை சென்றார்.
அங்கு, கோவை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இதனையடுத்து அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய கமல்ஹாசன்,இந்த வயதில் தான் அரசியலுக்கு வந்ததற்கு மன்னிப்புதான் கேட்க வேண்டும். போர்படையில் முன் நிற்பவர் பயப்படகூடாது; நான் நிற்பேன்.
என்னை தோற்கடித்தாலும் மீண்டும் வந்து நிற்கின்றேன் என்றார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில், கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட தயாராக உள்ளதாக சூசகமாக தெரிவித்த கமல்ஹாசன், 2024 தேர்தலுக்கான முன்னேற்பாட்டிற்கான இந்த சபை எனக் கூறினார்.