உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. ரோகித் சர்மா 29 பந்துகளில் 47 ரன்களை அடித்து அவுட் ஆனார். இதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும்.
இவருடன் ஆடிய சுப்மன் கில் 65 பந்துகளில் 79 ரன்களை அடித்த நிலையில், காயம் காரணமாக களத்தை விட்டு வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி சிறப்பாக விளையாடி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50-வது சதத்தை அடித்த விராட் கோலி 117 ரன்களில் அவுட் ஆனார்.
ஷ்ரேயஸ் அய்யர் அதிரடியாக ஆடி 105 ரன்களையும், கே.எல். ராகுல் 39 ரன்களையும் குவிக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்தது. நியூசிலாந்து அணி சார்பில் சௌதீ 3 விக்கெட்டுகளையும், போல்ட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இதைதொடர்ந்து, 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களிமிறங்கியது. இதில், தொடக்க வீரர்களாக விளையாடிய கான்வாய் மற்றும் ரவீந்திரா ஆகியோர் தலா 13 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வில்லியம்சன் மற்றும் மிட்செல் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.வில்லியம்சன் அரை சதம் அடித்து 69வது ரன்களில் ஆட்டமிழந்தார். மிட்செல் சதம் அடித்து 134 ரன்களில் அவுட்டானார்.
நியூசிலாந்து அணி 48.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 327 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி அபாரமாக பந்து வீசி 57 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன்மூலம், இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.
இந்த வெற்றி மூலம் இந்தியா 4 -வது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டி தகுதிப் பெற்றது.
மேலும், இது போன்ற செய்திகளை அறிய https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/sports/ கிளிக் செய்யவும்.