வெள்ளியங்கிரி ஆண்டவர் மலை கோயில் பற்றிய ரகசியங்கள்!!!
மூலவர் - வெல்லியங்கிரி ஆண்டவர்
தல விருட்சம் – மனோன்மணி
தூரம்: தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மையத்திலிருந்து 40 கி.மீ.
முக்கிய விழாக்கள்: 1) சித்ராபௌர்ணமி பண்டிகை - ஏப்ரல் முதல் மே வரை
2) கார்த்திகை விழா - நவம்பர் முதல் டிசம்பர் வரை
கோயில் சிறப்புகள்
வெல்லியங்கிரி ஆண்டவர் மலை கோவிலில் சிவபெருமான் தன்னுடைய பக்தர்களுக்கு பஞ்ச (ஐந்து) லிங்க வடிவில் ஏழுந்தருளி அருள்பாலிக்கிறார். இந்த குகை சுமார் 6 அடி அகலம் கொண்டது. இவ்விடத்தில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக அவதரித்த காரணத்தினால் இங்கு சிவபெருமானுக்கு “சுயம்புமூர்த்தி” என்றொரு பெயரும் உண்டு. கோயிலின் இருபுறமும் உள்ள இரண்டு பாறைகள் துவார பாலகர்களைப்போலவே காட்சியளிக்கிறது. வெல்லியங்கிரி மலைகளில் ஐந்தாவது மலையில் காணப்படும் மணல் சாம்பல் நிறத்தில் இருப்பதினால் இம்மலையை திருநீர் மலை என்றும் புனித சாம்பல் மலை என்றும் அழைக்கப்படுகிறது.
வெள்ளியங்கிரி மலை வரலாறு
வெல்லியங்கிரி மலை (Velliangiri Mountain), நீலகிரி ரிசர்வ் பகுதியின் ஒரு பாகமாகும். மேலும் இம்மலை கோயம்புத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையின் எல்லையில் அமைந்துள்ளது. வெல்லியங்கிரி மலை "சப்தகிரி” (ஏழு மலைகள்) என்று அழைக்கப்படுகிறது. கிரகத்தின் மிக சக்திவாய்ந்த இடமாக வெல்லியங்கிரி மலைகள் கருதப்படுகின்றன.
இந்தியாவில், இந்து மத நூல்களின்படி மூன்று புனித கைலாசங்கள் உள்ளன; முதல் கைலாசம் வடக்கு துருவத்தில் கடலுக்கு நடுவே உள்ளதினால் பத்தர்களால் செல்ல இயலவில்லை. இதுவே வட கைலாசம் ஆகும். மத்திய கைலாசம் எனப்படும் இரண்டாவது கைலாசம், இமயமலையில் உள்ளது. இந்த காரணத்தால், பல தென்னிந்திய பக்தர்களால் இரண்டாவது கைலாசத்திக்கும் செல்ல இயலவில்லை. மூன்றாவது கைலாசம் என அழைக்கப்படுவது நம் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் அமைந்துள்ள வெல்லியங்கிரி மலைகளை குறிக்கிறது. இந்த கோவிலில் உள்ள சிவ தரிசனம் இமயமலையில் உள்ள சிவ தரிசனத்திற்கு சமம் என்று நம்பப்படுகிறது.
வெல்லியங்கிரி மலை பற்றிய ரகசியங்கள்
வெள்ளியங்கிரி மலை ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் கதைகளுடன் தொடர்புடையது. இங்கு ஏழு மலைகள் உள்ளன. 5 வது வெள்ளியங்கிரி மலையில் அன்னை சீதா தேவி தவம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் நமது மஹாபாரத புராணத்தின்ப்படி அர்ஜுனனின் முன்பாக சிவன் வேட்டைக்காரனாக தோன்றி, அவனுடன் சண்டையிட்டு பசுபதாஸ்திரத்தை வழங்கிய இடம் வெல்லியங்கிரி என்றும் நம்பப்படுகிறது. முதல் மலை தொடங்கி ஏழாவது மலை வரை 5.5 கி.மீ முழுவதும் மிகவும் அடர்ந்த காடாக காணப்படுகிறது. கோயம்புத்தூரின் குடிநீரை தேவையை போக்கும் சிறுவணி அணை மற்றும் நொய்யல் ஆற்றின் தொடக்கம் இம்மலை தொடர்களில் இருந்தே ஆரம்பமாகிறது.
பெரும்பாலும் பக்தர்கள் மார்ச் முதல் மே வரையிலான பங்கூனி மற்றும் சித்திரை ஆகிய தமிழ் மாதங்களில் மட்டுமே வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிளை தரிசித்து செல்கின்றனர்.
முதல் ஆறு வெள்ளியங்கிரி மலைகள், மனித உடலில் உள்ள மூலாதார, ஸ்வாதிஷ்டானா, மணிபூரகா, அனகதா, விசுத்தி, மற்றும் அஃங்க ஆகிய “ஆறு சக்கரங்கள்” என்று கூறப்படுகிறது. சஹஸ்ர என்ற ஏழாவது மலை, சிவபெருமானின் மலை என்றும் சிவ ஜோதி நடன மலை என்றும் அழைக்கப்படுகிறது.
வெல்லியங்கிரி கோயிலின் புனித தீர்த்தங்கள்:
வெல்லியங்கிரி மலைகளில் மூன்று புனித தீர்த்தங்கள் உள்ளன, கைதட்டி சுனை இரண்டாவது மலையிலும், பம்பட்டி சுனை மூன்றாவது மலையிலும் உள்ளது. இவ்விரு சுனைகளும் பக்தர்களின் தாகத்தைத் போக்கி புத்துணர்ச்சியளிகின்றனர். நான்காவது மலையை கடந்து ஐந்தாவது மலையை அடைந்ததும் காணப்படும் மணல் சாம்பல் நிறத்தில் இருப்பதால் இம்மலைக்கு திருநீர் மலை என்றும் புனித சாம்பல் மலை என்றும் பெயருண்டு. 6 வது மலையில் உள்ள ஆண்டி சுனை “தெற்கு கைலாசத்தின் மனசா சரோவர்” என்று போற்றப்படுகிறது.
ஏழாவது மலையானது பார்ப்பதற்கு எளிதாகவும் மலையேற்றத்திற்கு மிகவும் கடினமான செங்குத்தான மலையாக அமைந்துள்ளது. இங்கே 6 அடி அகலமான குகையில் பஞ்சலிங்க வடிவத்தில் சுயம்புமூர்த்தியாக அவதரித்துள்ள சிவபெருமானை காண பக்தர்கள் வருடம்தோறும் பெரும்திரளாக வந்து வணங்கி செல்கின்றனர். இன்றும் இந்த மலைகளில் மனிதர்களின் கண்ணுக்கு தெரியாமல் பல சித்தர்கள் வாழந்து வருவதாக நம்பப்படுகிறது.
RELATED IMAGES