Texas ventures வழங்கும் GMCV 2030 ஐ வழங்குகிறது: உலகளாவிய உற்பத்திக்கான ஒரு பார்வை         விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     Coimbatore News      Spiritual      மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பற்றிய அறிய தகவல்கள்!!!

மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பற்றிய அறிய தகவல்கள்!!!

   
மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பற்றிய அறிய தகவல்கள்!!!

மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, 12 நூற்றாண்டில் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற மலை கோயிலாகும். இந்த கோயில், தமிழ்நாட்டில் கோவையில் (Coimbatore) அமைந்துள்ளது. ஏழாவது படை கோவிலாக கருதப்படும் இக்கோவிலில், முருகன் பெருமாள் தண்டயுதாபனி வடிவத்தில் எழுந்தருளி அருளப்பதித்து கொண்டிருக்கிறார்.

பெரும்பாலான முருகன் கோயில்களைப் போலவே, இக்கோயிலும் 600 அடி (180 மீ) உயரமுள்ள கிரானைட் மலையிலும், மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியிலும் கோயம்புத்தூர் நகரத்திலிருந்து 12 கி.மீ தூரத்தில் ஒரு அழகிய மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு முருக பெருமாளுக்கு, தைபூசம் தினத்தன்றும் மற்றும் பிற விசஷ தினங்களிலும் சிறப்பு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மருதமலையில் இரண்டு நீரூற்றுகள் உள்ளன, அவை மருதா தீர்த்தம் என்றும் & பாம்பாட்டி சுனை என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இத்தீர்த்தம், பல நோய்களை குணப்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.

maruthamalai-temple-pancha-virutcha-vinayagar

கோயில் பிரகாரத்தின் தெற்கு முனையில் அமைந்தருளியிருக்கும் வலம்புரி பிள்ளையார்தான்தோன்றி விநாயகர்” என்று அழைக்கப்படுகிறார். இக்கோவிலின் மற்றொரு சிறப்பு அம்சமாக கருதப்படுவது இங்கு அமைந்துள்ள பாம்பாட்டிசித்தர் குகையாகும். பாம்பாட்டி சித்தர் 12 நூற்றாண்டில் வாழ்ந்த 18 புகழ் பெற்ற சித்தர்களுள் ஒருவராக போற்றப்பட்டவர். அவர் மருதமலையடிவாரத்தில் நிகழ்த்திய தவத்தின் பயனாய் முருகன்பெருமாள் அவருக்கு பாம்பின் வடிவில் தோன்றி அருள்பாலித்தார். பின்னர் முருக பெருமாள் தனது துணைவியார் வள்ளி மற்றும் தெய்வானை ஆகியோருடன் தோன்றி மருத தீர்த்தத்தை வழங்கி ஆசீர்வதித்தார்.

 

முருக பெருமாளின் கருவறை மற்றும் பாம்பாட்டி சித்தரின் குகை ஆகியவற்றிலிருந்து இணைக்கும் ஒரு சுரங்கப்பாதை இக்காலத்தில் உருவாக்கப்பட்டது. மேலும் பாம்பாட்டி சித்தர் முருகனை வழிபட இப்பாதையை இன்றும் பயன்படுத்தி வருவதாக நம்பப்படுகிறது.

கட்டடக்கலை பாணி: திராவிட கட்டிடக்கலை

தூரம் (கோயம்புத்தூர் சந்திப்பிலிருந்து): 15 கி.மீ.

கோயில் நேரம்: காலை 6 மணி முதல் 1 மணி வரை & 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை

பூஜா நேரம்

  • விஸ்வரூப தரிசனம்  - 05.30 A.M
  • காலசந்தி பூஜை  - 08.30 A.M
  • உச்சிக்காலம் பூஜை- 11.30 A.M
  • சயரட்சை பூஜை  - 04.30 P.M
  • அர்த்த ஜாம பூஜை - 07.30 P.M

கோவிலுக்கு தொடர்பு கொள்ள

அழைக்கவும்: 0422 242 2490

Address: Temple Rd, Maruthamalai, Coimbatore, Tamil Nadu 641046

Website: http://www.marudhamalaimurugantemple.tnhrce.in/

Mail: maruthamalaimurugankoil@gmail.com

Location Map: Click Here

Related Images

paambaati-siddhar-kugai-marudhamalai-temple

maruthamalai-temple-pancha-virutcha-vinayagar

Paambatti_siddhar_history

Related News