ஜெயிலரின் இரண்டாவது பாடல் வெளியானது         சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் எப்படி இருக்கு         விஜய் vs அட்லீ         இந்தியன் 2 க்கு பிறகு இந்த இயக்குனருடன் இணையும் கமல்         மீண்டும் ஆரம்பம் பட கூட்டணி ,அஜித் vs ஆரிய          ஜெயிலர் படத்தில் ரஜினியின் சம்பளம் வெறும் 20 கோடி         விஜய்யின் லியோ பட வியாபாரம் இத்தனை கோடியா?         Rolex சூர்யாவுடன் இணையும் பாகுபலி பிரபாஸ்         வாரிசு வசூலை முறியடித்த வாத்தி         அஜித் ஹீரோ விஜய் வில்லன் விரைவில் அதிகாரபூர்வ தகவல்         சம்பள பிரச்சனையால் நடிக்க மறுத்த விஜய்         லவ் இல் டுடே பெண்கள்         உலக அளவில் 5ஆம் இடத்தில் தல அஜித்         தளபதி 67 ஷூட்டிங் தொடங்கியதா         நடிகர் விஜய்க்கு அறுவை சிகிச்சை         வாத்தி பட பாடல் , அதிரடி அப்டேட்         துணிவு vs வாரிசு,முதல் நாள் வசூல்         வாரிசு மற்றும் துணிவு,அதிகாலை காட்சிக்கு தடை         வாரிசு ரிலீஸ் தேதி தள்ளி போனது         13 கெட்ட வார்த்தைகள் கொண்ட 'துணிவு' படம்         ட்ரைலர் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 துணிவு         உலகளவில் விஜய்யின் வாரிசு நம்பர் 1         டிக்கெட் புக்கிங் ஓபன்,துணிவு 22, வாரிசு 40 டிக்கெட்கள் விற்றுப்போய் உள்ளது.         பிணத்தை தூக்கிய அஜித்         துணிவுடன் துணிவு ப்ரோமோஷன்         டிவியில் வெளியாகும் வாரிசு சன் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு         தடைகளை தாண்டி உலகளவில்,வசூலில் மிரட்டும் ' அவதார் 2'         தளபதியின் "வாரிசு" வெற்றிபெற.. சபரிமலைக்கு சென்ற ரசிகர்கள்         இந்தியாவின் சிறந்த படங்களில் மூன்று தமிழ் படங்கள் இடம் பெற்று உள்ளது.         ஜீவி பிரகாஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்க உள்ளனர்         ஹ்ரித்திக் ரோஷன் காந்தார படத்தின் நடிகர் ரிஷப ஷெட்டியை பாராட்டியுள்ளார்         துனிவு பற்றிய மிகவும் மதிப்புமிக்க புதுப்பிப்புகள்         கனெக்ட் ட்ரைலர் ரிலீஸ்         நடிப்பிலிருந்து விலகுகிறேன்" - நடிகர் ஆமீர் கான் திடீர் முடிவு         வடிவேலுவின் நாய் சேகர் படத்திலிருந்து பாடல் வெளியீடு         லவ் டுடே' படத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு         23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி         அஜித்தின் 62வது  படத்தில் ஜி.பி.முத்து        
Home     Coimbatore News      City news      மருதமலை கோவிலில் நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி

மருதமலை கோவிலில் நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி

   
மருதமலை கோவிலில் நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி

கோவையில் மருதமலை முருகன் கோவில் உள்ளது. இது முருக பக்தர்களால் ஏழாவது படை வீடு என அழைக்கப்படுகிறது.

இந்த கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய தினந்தோறும் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மருதமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டுக்கான கந்தசஷ்டி விழா கடந்த 14-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடந்தது. கந்த சஷ்டி விழாவின் 6-ம் நாளான நேற்று காலை திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் நடை பெற்றது. காலை 8.30.மணி அளவில் யாகசாலை கலசங்களில் உள்ள தீர்த்தங்களை கொண்டு மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

காலை 9 மணிமுதல் 10.30 மணி அளவில் வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது வள்ளி மஞ்சள் பட்டும், தெய்வானை சிவப்பு பட்டும் அணிந்திருந்தனர். சுப்பிரமணிய சுவாமி வெண்பட்டு ஆடை உடுத்தி மணக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

அதன்பிறகு பக்தர்களின் மொய்ப்பணம் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு மொய் வைத்தனர். அந்த வகையில் ஒட்டுமொத்தமாக ரூ.86,200 மொய்ப்பணம் வசூலானது.

தொடர்ந்து பாத காணிக்கை செலுத்துதல் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமிகள் தம்பதி சமேதராக பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். மருதமலை முருகன் கோவிலில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும், இது போன்ற செய்திகளை அறிய https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/city-news/ கிளிக் செய்யவும்.

Related News