ஜெயிலரின் இரண்டாவது பாடல் வெளியானது         சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் எப்படி இருக்கு         விஜய் vs அட்லீ         இந்தியன் 2 க்கு பிறகு இந்த இயக்குனருடன் இணையும் கமல்         மீண்டும் ஆரம்பம் பட கூட்டணி ,அஜித் vs ஆரிய          ஜெயிலர் படத்தில் ரஜினியின் சம்பளம் வெறும் 20 கோடி         விஜய்யின் லியோ பட வியாபாரம் இத்தனை கோடியா?         Rolex சூர்யாவுடன் இணையும் பாகுபலி பிரபாஸ்         வாரிசு வசூலை முறியடித்த வாத்தி         அஜித் ஹீரோ விஜய் வில்லன் விரைவில் அதிகாரபூர்வ தகவல்         சம்பள பிரச்சனையால் நடிக்க மறுத்த விஜய்         லவ் இல் டுடே பெண்கள்         உலக அளவில் 5ஆம் இடத்தில் தல அஜித்         தளபதி 67 ஷூட்டிங் தொடங்கியதா         நடிகர் விஜய்க்கு அறுவை சிகிச்சை         வாத்தி பட பாடல் , அதிரடி அப்டேட்         துணிவு vs வாரிசு,முதல் நாள் வசூல்         வாரிசு மற்றும் துணிவு,அதிகாலை காட்சிக்கு தடை         வாரிசு ரிலீஸ் தேதி தள்ளி போனது         13 கெட்ட வார்த்தைகள் கொண்ட 'துணிவு' படம்         ட்ரைலர் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 துணிவு         உலகளவில் விஜய்யின் வாரிசு நம்பர் 1         டிக்கெட் புக்கிங் ஓபன்,துணிவு 22, வாரிசு 40 டிக்கெட்கள் விற்றுப்போய் உள்ளது.         பிணத்தை தூக்கிய அஜித்         துணிவுடன் துணிவு ப்ரோமோஷன்         டிவியில் வெளியாகும் வாரிசு சன் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு         தடைகளை தாண்டி உலகளவில்,வசூலில் மிரட்டும் ' அவதார் 2'         தளபதியின் "வாரிசு" வெற்றிபெற.. சபரிமலைக்கு சென்ற ரசிகர்கள்         இந்தியாவின் சிறந்த படங்களில் மூன்று தமிழ் படங்கள் இடம் பெற்று உள்ளது.         ஜீவி பிரகாஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்க உள்ளனர்         ஹ்ரித்திக் ரோஷன் காந்தார படத்தின் நடிகர் ரிஷப ஷெட்டியை பாராட்டியுள்ளார்         துனிவு பற்றிய மிகவும் மதிப்புமிக்க புதுப்பிப்புகள்         கனெக்ட் ட்ரைலர் ரிலீஸ்         நடிப்பிலிருந்து விலகுகிறேன்" - நடிகர் ஆமீர் கான் திடீர் முடிவு         வடிவேலுவின் நாய் சேகர் படத்திலிருந்து பாடல் வெளியீடு         லவ் டுடே' படத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு         23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி         அஜித்தின் 62வது  படத்தில் ஜி.பி.முத்து        
Home     Coimbatore News      City news      மருதமலை முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

மருதமலை முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

   
மருதமலை முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

கோவை மருதமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பக்தர்களால் முருகனின் ஏழாம் படைவீடு என அழைக்கப்படுகிறது.

இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் வருடந்தோறும் கந்தசஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா 14-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து காலை, மாலை இரு வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

4-வது நாளான நேற்று, வெள்ளி மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முன் மண்டபத்தில் ஆடும் மயில் வாகனத்தில் தண்டாயுதபாணி பக்தர்களுக் காட்சியளித்தார்.

இன்று கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. இதனையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கோ பூஜையுடன் விழா தொடங்குகிறது.

அதனை தொடர்ந்து 16 வகை திரவியங்களால் சுவாமிக்கு அபிேஷகம், மகா தீபாராதனை காட்டப்படுகிறது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. பிற்பகல் 3 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது..

அதிகளவில் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் அதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

மருதமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு இன்று(சனிக்கிழமை) மற்றும் நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு தினங்கள் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

எனவே பக்தர்கள் கோவில் சார்பில் இயக்கப்படும் வாகனங்களிலும், மலைப்படிக்கட்டுகள் வழியாகவும் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மருதமலை அடிவாரத்தில் இருந்து 3 வாகனங்கள் மலைக்கோவிலுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இன்று சூரசம்ஹாரம் என்பதால் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் சார்பில் கூடுதல் வாகனங்களை இயக்குவது என முடிவுசெய்யப்பட்டு உள்ளது.

சூரசம்காரத்தை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட போலீசார் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுதவிர டிரோன்கள் மூலம் கோவில் பகுதியில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார், உறுப்பினர்கள் மகேஷ்குமார், பிரேம்குமார், சொக்கம்புதூர் கனகராஜ், சுகன்யா ராஜரத்தினம் மற்றும் கோவில் இணை ஆணையர் ஹர்சினி ஆகியோர் செய்து வருகின்றனர்.

நாளை திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

மேலும், இது போன்ற செய்திகளை அறிய https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/city-news/ கிளிக் செய்யவும்.

Related News