நடிகர் ரஜினிகாந்த் சென்னை லீலா பேலசில் செய்தியாளர்களை சந்தித்தார்.
2017-ஆம் ஆண்டு தான் முதல் முறையாக அரசியலுக்கு வருவேன் என நான் கூறியிருந்தேன். எனவே 25 ஆண்டுகளாக முன்பாகவே அரசியலுக்கு வரப்போகிறேன் என்ற வதந்தியை இனி யாரும் பரப்ப வேண்டாம் என்றார். அரசியலில் மாற்றம் ஏற்பட என்னிடம் மூன்று திட்டங்கள் உள்ளது என்றார்.
1. முதல் திட்டம் ஆட்சிக்கு வந்தவுடன் தேவையான அளவிற்கான கட்சி பதவிகளை மட்டுமே வைத்துக் கொள்வேன்.
2. இரண்டாவது திட்டம் இளைஞர்களுக்கு எம்எல்ஏ சீட் உண்டு கட்டாயமாக கொடுக்கப்படும். எனது கட்சியில் 50 வயதிற்கு கீழ் உள்ள, நன்கு படித்தவர்கள் மற்றும் ஊழலற்ற இளைஞர்கள் 40 சதவீதம் பேருக்கு வாய்ப்பு உள்ளது என்றும் மேலும் ஆசிரியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளில் நல்லவர்கள் இருப்பார்கள். அவர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் வீட்டு கதவை தட்டி நானே அழைப்பேன். புதிய மாற்றம் சட்டசபைக்குள் ஏற்படும் என்றார்.
3. மூன்றாவது திட்டம் - முதல்வர் வேட்பாளர்.
தேசிய கட்சிகளை தவிர்த்து ஒரு கட்சியில் இருக்கும் தலைவரும் முதல்வரும் ஒருவரே இருப்பர்.
வருங்கால முதல்வர் என்று சொல்வதை நிறுத்துங்கள். எனக்கு முதல்வர் பதவி வேண்டாம்.
கட்சிக்கு ஒரு தலைமை
ஆட்சிக்கு ஒரு தலைமை செயல்படுத்துவோம் என்ற கருத்துக்கள் அனைத்தையும் பத்திக்கையாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.