கொரோனா பாதிப்பு காரணமாக முந்தய மாத கட்டணத்தையே மார்ச் மாத மின் கட்டணமாக செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மின்வாரியம் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், கொரோனா பரவுதல் காரணமாக வீடுகளுக்கு சென்று மின்சார கட்டண ரீடிங் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் மக்கள் கவுண்டர்களுக்கு வருவதை தவிர்த்து இணைய வழியில் கடந்த மாத மின் கட்டணத்தையே மார்ச் மாத மின் கட்டணமாக செலுத்தலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு செலுத்தப்படும் மின்கட்டணம் அடுத்து வரக்கூடிய மாதங்களில் கணக்கிட்டு, மீதி தொகை இருந்தால், திரும்ப பெறலாம் அல்லது சரிசெய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.