இந்தியாவில் கொரோன அதிகம் பரவி வரும் இந்நேரத்தில் சிலரின் அலட்சிய செயலால் நடந்தது இந்த விபரீத சம்பவம். இந்தியாவில் கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள இடங்களில் ஒன்று தான் மும்பை. இன்று வதந்தியை நம்பி கூடிய அப்பாவி வெளிமாநிலதோர்.
இந்தியாவில் 144 தடை நீடித்து வரும் இந்நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மும்பையில் உள்ள பாந்த்ரா ரயில் நிலையத்தில் கூடினர் காரணம் இன்று ரயில்வே இயங்கும் என்று சிலர் பரப்பிய வதந்தி தான் காரணம். அதை உண்மை என்று நம்பிய வெளிமாநில மக்கள் பலரும் கூடினர் இக்கட்டான இந்நேரத்தில் காவல்த்துறை அதிகாரிகள் தடியடி நடத்தி விரட்டியுள்ளனர்.
அரசாங்கம் கூறிவரும் அறிவுரைகளை மக்கள் ஆகிய நாம் கேட்டுநடப்பது அவசியம். இந்த நோயின் வீரியம் தெரிந்த மக்கள், அதை தெரியாத மக்களுக்கு வதந்தியை பரப்பாமல் அதன் விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்தவும். மேலும் அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு 123coimbatore.com சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இதைப்போன்ற சம்பவங்களை இனியும் நடவாமல் தடுப்போம் அலட்சியம் வேண்டாம் மக்களே!