சகுனி திரைப்படத்தில் மேயர் தேர்தலில் பெரும் வெற்றி கண்ட ராதிகா சரத்குமார் இப்போது தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் இறங்க இருக்கிறார். தேர்தல் என்றாலே பெரும் சூழ்ச்சி, பதவி பேராசை, அனுதாபம் மற்றும் போட்டிக்கு பஞ்சம் இருக்காது. அதில் ஒன்று தான் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் - கடந்த 2015ஆம் ஆண்டு நடிகர் சரத்குமாரை எதிர்த்து போட்டியிட்ட நடிகர் விஷால் குழுவினர்கள் தென்னிந்திய நடிகர்களிடையே பெரும் அனுதாபம் பெற்று வெற்றிகண்டனர். இப்போது விஷால் குழுவினர்களுக்குள் ஏதோ பிரிவு உண்டாகி சிலர் விஷாலுக்கு எதிராக திரும்பி உள்ளனர். மூன்று ஆண்டிற்கு ஒருமுறை இந்த தேர்தல் நடக்க வேண்டும் ஆனால் கட்டடப்பணி, செயற்குழு கூடாத காரணத்தினால் தேர்தல் குழுவினர்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை. இப்போது நடந்த அவசர செயற்குழுவில், லோக் சபா தேர்தல் முடிவுகள் வெளியானதும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் விரைவில் வரும் என்ற தகவல் நமக்கு கிடைத்தது. இத்தேர்தலில் விஷால் அணியினர்கள் போட்டியிட்டால் அவர்களை எதிர்த்து நடிகர் சரத்குமார் போட்டியிடமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது அவருக்கு பதிலாக குணச்சித்திர நடிகை மற்றும் அவரின் மனைவி ராதிகா சரத்குமார் போட்டியிடுவார்.
இதையடுத்து நடிகர் நாசரும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்பது உறுதியாகியுள்ளது.