அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான படம் புஷ்பா இத்திரைப்படம் இந்தியா அளவில் மிக பெரும் வசூல் சாதனை படைத்தது. புஷ்பா படம் 200 கோடி பட்ஜெட்டில் உருவாகி 350 கோடி வரை வசூல் சாதனை படைத்தது. ஒரே பாட்டில் புகழின் உச்சத்தைத் தொட்டார் சமந்தா,
அதாவது சமந்தா நடனமாடிய உ சொல்றியா மாமா பாடல்தான் பட்டிதொட்டியெங்கும் கலக்கியது அதுவும் சமந்தா நடனத்தை பார்ப்பதற்காக மட்டுமே ஏராளமான ரசிகர்கள் படத்திற்கு சென்றனர். புஷ்பா படம் கிளைமாக்ஸில் பகத் பாசில் நடித்திருப்பார் அதோடு திரைப்படம் முடிந்தது .
தற்போது புஷ்பா-2இல் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இதனால் பகத் பாசில் காட்சிகளுக்கு முக்கியத்துவம் குறைக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துஉள்ளது .பகத் பாசில் மற்றும் அல்லு அர்ஜுனின் சண்டை காட்சிக்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.