8 வருடங்களுக்கு பின் ,வருகிற பொங்கல் பண்டிகையை அன்று
விஜய் நடிக்கும் "வாரிசு" மற்றும் அஜித்தின் "துணிவு" ஆகிய இரு படங்களும் நேரடியாக மோதுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் 2 நடிகர்களுக்கும் சரிசமமாக திரையரங்குகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இது குறித்து இருதரப்பு ரசிகர்களும் பல்வேறு வேண்டுதல்கள் மற்றும் விளம்பரங்களை செய்து வருகின்றனர்.
மயிலாடுதுறையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் சுபாஷ், மணிகண்டன் ஆகிய இரண்டு பேரும் வாரிசு படம் வெற்றி பெற வேண்டி,சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று, அங்கே பதினெட்டாம்படி அருகில் இந்த பட பேனரை வைத்து உயர்த்தி பிடித்தபடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
அத்துடன் வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.