அல்லு அர்ஜுன்,ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த படம் புஷ்பா.இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார்.சுகுமார் இயக்கிய இப்படத்தின் இரண்டாம் பாகம் மார்ச்சில் தொடங்கும் என தகவல் வெளியானது. ஆனால் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பால் இன்னும் சிறப்பாக இரண்டாம் பாகத்தை தயாரிக்க வேண்டும் என சுகுமார் திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையில் புஷ்பா திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்திய மொழிகள் மட்டும் இன்றி வெளிநாட்டு மொழிகளிலும் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.எனவே இது பான் வேர்ல்ட் திரைப்படமாக இருக்கும்.