பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர் ஒவ்வொருவராக அவர்கள் வாழ்க்கையில் நடந்த இன்ப துன்ப கதைகளை கூறிவருகின்றனர். நேற்று அபிஷேக் மற்றும் தாமரை செல்வி கூறினார்கள்.இன்று காலை வெளிவந்த ப்ரோமோவில் நிரூப் தனது வாழ்க்கையில் நடந்த கதையை கூறுகிறார்.
மேலும் அவர் யாஷிகா ஆனந்த் பற்றி மிகவும் உருக்கமாக பேசுகிறார். மக்கள் பலர் நான் பிக் பாஸ் வருகிறேன் என்று செய்தி வெளியானதும் யாஷிகாவின் முன்னாள் காதலன் வருகிறார் என்று கூறினார்.
நான் பெருமையாக சொல்கிறேன் இங்கே அவள் மூலமாக வந்திருப்பது எனக்கு பெருமையான விஷயம். இதை சொல்வதில் எனக்கு எந்த அசிங்கமும் இல்லை, நிறைய பேர் கேட்பார்கள், எனக்கு வாழ்க்கை காட்டியது அவர்தான்.
"ஒரு பெண்ணால் ஆண் வளர கூடாதா? ஆண்கள் மூலமாக பல பெண்கள் வளரலாம் ஆனால் பெண்கள் மூலமாக ஆண் வரக் கூடாதா" என அழுத்தமாக கேட்டிருக்கிறார் நிரூப் நந்தகுமார்.