பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த கையோடு ஷிவானி நாராயணன் தன்னுடைய கவர்ச்சி போட்டோக்கள் அனைத்தையும் டெலிட் செய்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் நடித்தவர் ஷிவானி நாராயணன். பிறகு ZEE தமிழில் இரட்டை ரோஜா என்ற சீரியலில் நடித்தவர்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது போட்டோக்களை பதிவிட்டு பிரபலமானவர்.
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஹௌஸ்ட்மேட் பாலா என்பவருடன் நெருக்கமாகி பழகிவந்திருக்கிறார்.
இதனால் இருவருக்கும் காதல் என்ற பேச்சு எழுந்தது. பிக்பாஸ் வீட்டில் இருந்த சக ஹவுஸ்மேட்டுகள் உள்ளிட்ட சிலரே ஷிவானியையையும் பாலாஜியையையும் வைத்து கிண்டலடித்தனர்.
இந்நிலையில் ஒரு டாஸ்கின் போது பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஷிவானியின் அம்மா, பாலாஜியுடன் பழகுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.எல்லார் முன்னிலையிலும் ஷிவானியை வெளித்திவாங்கினார். என் மானத்தையே வாங்கிவிட்டாய் என்று தாண்டவம் ஆடிவிட்டார்.
இதனை பார்த்த ரசிகர்கள், ஏன் மகள் கிளாமர் போட்டோக்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்த போதெல்லாம் மானம் போகவில்லையா என ஷிவானியின் அம்மாவான அகிலாவை விளாசினர்.
இதனால் ஷிவானி பிக்பாஸ் வீட்டில் இருந்த போது அவருடைய போட்டோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்து வந்தார் ஷிவானியின் அம்மா. இவ்வாறு ரசிகர்கள் கேட்ட கேள்வியினால் கவர்ச்சிபோட்டாக்களை உடனடியாக நீக்கம் செய்துள்ளார் ஷிவானி.
இனிமேல் கிளாமர் போட்டோக்களை வெளியிட போவதில்லை என்றும் ஷிவானி முடிவு செய்துள்ளாராம்.