தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த சுச்சி, மீண்டும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகிவிட்டார். பிக்பாஸ் குறித்து தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது நினைவுகளை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் பாலாஜிக்கும் ஷிவானிக்கும் இடையிலான காதல் குறித்த ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார் சுச்சி. அதாவது, காதல் கண்ணை மறைக்குது என ஆரி கூறியது குறித்து விளக்கம் அளித்த பாலாஜி, இங்க யாரும் லவ் பண்ணல என்றார்.
இதுதொடர்பான மீமை தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் ஷேர் செய்துள்ள சுச்சி, சூப்பர் என கைகளை தட்டி பதில் தெரிவித்துள்ளார். பாலாஜியே தனக்கு ஷிவானி மீது காதல் இல்லை என்பதை தெளிவாக கூறிவிட்டார் என்று மறைமுகமாக தெரிவித்துள்ளார் சுச்சி.
பிக்பாஸ் வீட்டின் ஜெயிலில் இருந்த போதுக் கூட, ஷிவானியை உன் ஆளு என்னை முறைக்குது என்று பாலாஜியிடம் கூறினார் சுச்சி. இதனால் கடுப்பான பாலாஜி, ஷிவானியை என் ஆள் என்று எப்படி சொல்லலாம் என சுச்சியிடம் கோபப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.