கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் சிரஞ்சீவி சார்ஜா.அவரது மனைவி நடிகை மேக்னா ராஜ் 4 மாத கர்ப்பமாக இருந்த நிலையில், திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் காலமானார். இவரது மறைவு அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
பிறகு மேக்னா அவர்களுக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.அவரும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சிரஞ்சீவி மீண்டும் பிறந்து உள்ளதாக நினைத்து மகிழ்ச்சி அடைத்தனர்.மேக்னா தனது குழந்தைக்கு ராயன் ராஜ் சார்ஜா எனப் பெயரிட்டார்.
இந்நிலையில் நடிகை மேக்னா பிக்பாஸ் 4 கன்னட டைட்டில் வின்னரான பிரதாமை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக யூடியூப் சேனல் ஒன்றில் தகவல்கள் பரவி வந்துள்ளது.
இந்த செய்தி 2.70 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. யூடியூப் சேனல்கள் பார்வைகள் மற்றும் பணத்திற்காக மிகவும் தரக்குறைவாக இருக்கும்போது இதுக்குறித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க நினைக்கிறேன். அப்போதுதான் அது மற்ற சேனல்களுக்கும் ஒரு பாடமாக அமையும் என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.